திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 310 பேர் களமிறங்கியுள்ளனர் !

srilanka01_Fotor-239x300

பி.எம்.எம்.ஏ.காதர்
 இலங்கை ஜனநாயக சோஸலிச குடியரசின் 8வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் நாளை 17ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த பொதுத் தேர்தலில் திகாமடுள்ள தேர்தல் மாவட்டத்தில் 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 310 பேர் களமிறங்கியுள்ளனர்.இவர்களில் பதிவு செய்யப்பட்ட 14 அரசியல் கட்சிகளைச் 140 பேரும் 17 சுயேட்சைக் குழுக்களைச் 170 பேருமாக மொத்தம் 310 பேர் போட்டியிடுகின்றனர்.

 
 இம்மாவட்த்தில் 4.65.757 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர் கள் 464 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கவுள்ளனர். அம்பாறை தொகுதியில் 161.999 பேர் 160 வாக்களிப்பு நிலையங்களிலும, பொத்துவில் தொகுதியில் 1.52.147 பேர் 151 வாக்களிப்பு நிலையங்களிலும், சம்மாந்துறை தொகுதியில் 80.357 பேர் 87 வாக்களிப்பு நிலையங்களிலும்;, கல்முனை தொகுதியில் 71.254 பேர் 66 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிக்கவுள்ளனர்.
எல்லா வாக்களிப்பு நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.