நான் என்­னு­டைய வாழ்க்­கையில் ஒரு தடவை கூட தாஜு­தீனை சந்­தித்­தது கிடை­யாது !

image

 

“உண்­மையில் எனக்கும் பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீ­னுக்கும் இடையில் எந்­த­வி­த­மான காதல் தொடர்­பு­களும் இருக்­க­வில்லை. நான் என்­னு­டைய வாழ்க்­கையில் ஒரு தடவை கூட தாஜு­தீனை சந்­தித்­தது கிடை­யாது.
அது­மட்­டு­மின்றி ,குறைந்­தது தொலை­பே­சியில் கூட நான் அவ­ருடன் உரை­யா­டி­யது இல்லை.

2012 ஆம் ஆண்டு தாஜு­தீ­னு­டைய மரணம் நடை­பெற்று ஒரு மாதம் கடந்த நிலையில் தான் இது தொடர்­பான விட­யங்கள் சமூக வலைத்­த­ளங்­களில் போலி­யாக பரப்­பப்­பட்­டன. அதன்பின் தான் இது தொடர்­பான விட­யங்கள் காட்­டுத்தீ போல் அனைவர் மத்­தி­யிலும் பரவ ஆரம்­பித்­தன. இருப்­பினும், சிறிது காலம் இது தொடர்­பான விட­யங்கள் எது­வுமே வெளி­வ­ர­வில்லை.

ஆனால், ஜன­வரி 8 ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலை தொடர்ந்தே இது தொடர்­பான விட­யங்கள் மீண்டும் வெளி­வர ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன.

எனக்கு சற்றும் தெரி­யாத ஒரு­வரை என்­னோடு தொடர்­பு­ப­டுத்தி ஏன் செய்­தி­களை பரப்­பு­கின்­றார்கள் என்று எனக்கு புரி­ய­வில்லை. ஆரம்­பத்தில் தாஜு­தீ­னு­டைய மரணம் ஒரு விபத்து என்று செய்­தி­களை வெளி­யிட்­டி­ருந்­தார்கள்.

அதன்பின் அது ஒரு விபத்­தல்ல கொலை­யாக இருக்­கக்­கூடும் என்று செய்­தி­களை வெளி­யிட்­டார்கள்.
எனவே, காலத்­துக்கு காலம் தாஜு­தீ­னு­டைய மரணம் தொடர்­பாக வெவ்­வேறு கருத்­துகள் வெளி­வந்­து­கொண்­டி­ருக்கும் நிலையில் எதற்­காக அவ­ரு­டைய காத­லி­யா­கவும், தோழி­யா­கவும் என்னை தொடர்­பு­ப­டுத்தி சமூக வலைத்­த­ளங்­க­ளிலும், ஊட­கங்­க­ளிலும் செய்­தி­க­ளையும் அது­தொ­டர்­பான வீடி­யோக்கள், படங்­க­ளையும் வெளி­யி­டு­கின்­றார்கள் என்று எனக்கு விளங்­க­வில்லை”.

இவ்­வாறு மர­ணித்த பிர­பல றக்பீ வீரர் வஸீம் தாஜு­தீனின் காதலி என்று சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் கூறப்­படும் யசாரா அபே­நா­யக்க சிங்­கள பத்­தி­ரி­கை­யொன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ணலின் போது தெரி­வித்­தி­ருந்தார். அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

“எனது தந்தை ஒரு சினிமா, தொலைக்­காட்சி இயக்­குநர், தாயார் வைத்­தியர் . நான் இப்­போது வெளிநா­டு­களில் பல்­வேறு சமூக சேவை­களில் என்னால் முடிந்த பங்­க­ளிப்பை மேற்­கொண்டு வரு­கின்றேன். குறிப்­பாக, வயோ­தி­பர்­களை பரா­ம­ரிக்கும் பணி­க­ளுக்கு என்னால் முடிந்த பங்­க­ளிப்பை செய்து வரு­கின்றேன்.

” 2012 ஆம் ஆண்டு தாஜு­தீ­னு­டைய மர­ணத்­துடன் என்னை தொடர்­பு­ப­டுத்தி செய்­திகள் வெளி­வந்­து­கொண்­டி­ருக்கும் போதே அது தொடர்­பாக எனது எதிர்ப்பை ஊட­கங்கள் வழி­யாக நான் வெளி­ப­டுத்த விரும்­பினேன்.

எனினும், இணை­யத்­த­ளங்­களில் வெளி­வரும் இவ்­வா­றான வீடி­யோக்கள், படங்கள், செய்­திகள் தொடர்­பாக பெரி­தாக அலட்­டிக்­கொள்ள வேண்டாம் என்று நண்­பர்கள் பலரும் எனக்கு அறி­வுரை வழங்­கி­னார்கள். மேலும் மக்­க­ளு­டைய நற்­பெ­ய­ருக்கு சேறு பூசி அவர்­களின் கௌர­வத்­தையும் சுய­ம­திப்­பையும் களங்­கப்­ப­டுத்தும் இணை­யத்­த­ளங்­க­ளுக்கு பின்னால் சென்று நியாயம் பெற நானும் விரும்­ப­வில்லை.

ஆனால், இதில் உண்­மை­யில்லை என்ற போதிலும், தாஜு­தீ­னு­டைய மரணம் தொடர்­பாக என்னை தொடர்­பு­ப­டுத்தி செய்­திகள் வெளி­வந்த வண்ணம் இருப்­பதால் எதிர்­கா­லத்தில் என்­னி­டமும் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டலாம். ஆனால், அதற்கு எந்த அவ­சி­ய­மு­மில்லை. தாஜு­தீனை எனக்கு தெரி­யாது என்­பதே உண்மை. இதை அனை­வரும் புரிந்­துக்­கொள்ள வேண்டும்.

அது­மட்­டு­மின்றி, இலங்­கையில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட எந்த ஊட­கங்­க­ளிலும் இது தொடர்­பான செய்­திகள் வெளி­வ­ர­வில்லை. எனவே, தான் நான் தொடர்ந்து மௌனம் சாதித்­து­வ­ரு­கின்றேன்.

சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் வெளி­வரும் செய்­தி­க­ளினால் என்னால் இன்று தலை நிமிர்ந்து வெளியில் செல்­ல­மு­டி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. எல்­லோரும் என்­னிடம் இது தொடர்­பாக பல்­வேறு கேள்­வி­களை கேட்­கின்­றார்கள். இதனால் நான் பெரும் மன­அ­ழுத்­தங்­க­ளுக்கு மத்­தியில் வாழ்ந்து வரு­கின்றேன். அதை­விட என்னால் இன்று எனது குடும்­பத்­த­வர்­களும் நிம்­ம­தியை தொலைத்து விட்டு கண்ணீர் சிந்­து­கின்­றார்கள்.

ஆகவே, சமூக வலைத்­த­ளங்கள் செய்­தி­களை அறியும் ஊட­கங்­க­ளாக இருப்­ப­துடன், அவை மக்­களின் சுய மதிப்­பையும், கௌர­வத்­தையும் இல்­லா­தொ­ழிக்கும் காரி­யங்­க­ளையும் இன்று செய்­து­வ­ரு­கின்­றன. அர­சியல், தனிப்­பட்ட பழி­வாங்­கல்­க­ளுக்கும், சமூ­க­வ­லைத்­த­ளங்­க­ளை பயன்­ப­டுத்தி வரு­கின்­றார்கள்.

ஆகவே, இது ஒரு போலி­யான நாடகம் மாத்­தி­ரமே. இதில் எந்­த­வி­த­மான உண்­மையும் கிடை­யாது. ஆகவே, இவ்­வா­றான நம்­ப­க­தன்­மை­யற்ற செய்­தி­களை நம்ப வேண்டாம்.
பிர­பல றக்பி வீரர் வஸிம் தாஜு­தீ­னு­டைய மரணம் தொடர்­பான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. ஆகவே அந்த விசா­ரணை அறிக்கை வெளி­வந்­த­தும் மக்களால் எது உண்மை என்பதை தெரிந்துக்கொள்ள முடியும் இவ்வாறு அவர் தனது நேர்காணலின் போது தெரிவித்திருந்தார். யசாரா அபேநாயக்க றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணத்துடன் சம்பந்தப்பட்டுள்ளார்,