வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி !

அசாஹீம் 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிர் இழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பிறைந்துரைச்சேனையில் உள்ள தனது தாயாரை பார்த்து விட்டு தனது வீட்டுக்குச் செலலும் வழியில் வாழைச்சேனை – ஓட்டமாவடி எல்லை வீதியில் ஓட்டமாவடி புகையிரத கடவைக்கு அருகில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர் ஓட்டமாவடி 03ம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜமால்தீன் அமீன் (வயது – 35) மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் அடையாஙம் காணப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மரணமடைந்தவரின் உரவினர்கள் கருத்துத் தெரிவிக்கையில் மரணமடைந்த அமீன் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை ஆதரித்து வந்தவர் என்றும் இதனால் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இவரைச் சுட்டு கொண்டுள்ளரார்கள் என்றும் இதற்கு உரிய அதிகாரிகள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஊடகங்கள் மூலம் தெரிவித்துக் கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றளர்.

29_Fotor_Collage_Fotor