பள்ளிவாசலில் கைகலப்பு!

அசாஹீம் 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை நூரியா முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவயாலில் இன்று (14.08.2015) ஜூம்ஆ தொழுகையின் பின் பள்ளிவாயல் தலைவரை தாக்க வந்த குழுவினரின் தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரித்தனர்.

பிறைந்துரைச்சேனை நூரியா முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் இன்று இடம் பெற்ற ஜூம்ஆ தொழுகையின் பின்னர் வினியோகிக்கப்பட்;ட ஒரு துண்டுப்பிரசுரம் தொடர்பாக பள்ளிவாயல் தலைவரிடம் விளக்கம் கேட்க வந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பள்ளிவாயல் தலைவரை தாக்க முட்பட்ட போது அதனை தடுக்க முற்பட்ட இளைஞர்களே காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை சம் சம் வீதியைச் சேர்ந்த எம்.எல்.மதீன் (வயது – 32) மற்றும் பிறைந்துரைச்சேனை ஐஸ் பெக்டரி வீதியைச் சேர்ந்த காதர் இஸ்பாக் (வயது 30) என்ற இளைஞர்களுமே காயமடைந்தவர்களாவார்.
இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

111_Fotor