மைத்திரியின் கடிதத்தை மீள்பிரசுரிக்கத் தடை : மஹிந்த அறிவிப்பு !

 முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐ.ம.சு.கூ வேட்பாளரது வேட்புமனுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மஹிந்தவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவசரக்கடிதம் பற்றி தொடர்ச்சியான செய்திகளை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய ஊடகங்களுக்கும் அறிவித்துள்ளார்.

 மேலும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை செய்தியாக வெளியிட்ட அதே மட்டத்திலேயே இன்று மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்துக்கான செய்தி அமைந்திருக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.