அர­சாங்­கத்தில் இருக்­கின்ற மிகவும் சக்­தி­வாய்ந்த தனிப்­பட்­ட­வர்கள் என்னைப் பழி­வாங்­கு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர் – கோத்­த­பாய !

Gota

  புதிய அர­சாங்­கத்தின் சில சக்­திகள் தனது புக­ழுக்கும் நன்­ம­திப்­புக்கும் பங்கம் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு போரா­டிக்­கொண்­டி­ருப்­ப­தாக முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். 

இந்த சதித்­திட்­டத்தின் ஓர் அங்­க­மா­கவே தானும் தனது சகோ­த­ரரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மஹிந்த ராஜ­ப­க் ஷவும் இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழு­வினால் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். 

எமது நாட்­டுக்­காக நான் அனைத்­தையும் தியாகம் செய்தேன். பாது­காப்பு செய­லாளர் என்ற வகி­பா­கத்தை வகித்தேன். இந்­நி­லையில் அர­சாங்­கத்தில் இருக்­கின்ற மிகவும் சக்­தி­வாய்ந்த தனிப்­பட்­ட­வர்கள் என்னைப் பழி­வாங்­கு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர் என்று முன்னாள் பாது­காப்பு செய­லாளர் குறிப்­பிட்­டுள்ளார். 

எனது சொத்­துக்­க­ளையும் பொறுப்­புக்­க­ளையும் நான் ஏற்­க­னவே பிர­க­டனம் செய்­து­விட்டேன். அரச ஊழி­ய­ராக எந்­த­வொரு சட்­ட­வி­ரோ­த­மான செயற்­பாட்­டையும் நான் மேற்­கொண்­ட­தில்லை. மேலும் எந்­த­வொரு சட்­ட­வி­ரோ­த­மான அல்­லது இரக­சி­ய­மான வங்கிக் கணக்­கு­களை வெளி­நாட்டு வங்­கி­களில் நான் பேண­வில்லை. ஹுணுப்­பிட்­டியில் உள்ள அரச வங்கி ஒன்றின் கிளை­யி­லேயே எனது சம்­ப­ளமும் ஓய்­வூ­தி­யமும் வைப்பு செய்­யப்­பட்­டுள்­ளது. அது முப்­பது வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஆரம்­பிக்­கப்­பட்ட வங்கிக் கணக்­காகும். 2005 ஆம் ஆண்டு நான் இலங்­கைக்கு வரு­வ­தற்கு முன்­ன­தாக அமெ­ரிக்­காவில் இருந்த எனது இல்லத்தை விற்பனை செய்து விட்டேன். அது எனது மனைவியின் வங்கிக்கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை விடுத்து என்னிடம் கடனட்டை ஒன்று கூட இல்லை.