பங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவி காலிதா ஸியாவின் கார் மீது துப்பாக்கிச் சூடு !

Khaleda_Zia_former_Prime_Minister_of_Bangladesh_cropped

பங்­க­ளாதேஷ் எதிர்க்­கட்சித் தலைவி காலிதா ஸியா பய­ணித்த கார் டாக்கா நக­ரி­லுள்ள சந்­தை­யொன்றில் திங்­கட்­கி­ழமை நின்ற போது, அந்தக் கார் மீது துப்­பாக்கி வேட்­டுகள் தீர்க்­கப்­பட்­ட­தாக அவ­ரது செய­லாளர் தெரி­வித்தார்.

அவ­ரது காரை பெருந்­தொ­கை­யான மக்கள் தடிகள் மற்றும் கற்கள் சகிதம் முற்­று­கை­யிட்­டி­ருப்­பதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

இந்த மாத இறு­தியில் இடம்­பெ­ற­வுள்ள மேயர் பத­விக்­கான தேர்தல் தொடர்பில் வேட்­பாளர் ஒரு­வ­ருக்­காக பிர­சார நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவே காலிதா ஸியா சன­சந்­தடி மிக்க சந்தைப் பகு­தியில் காரை நிறுத்­தி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் அவர் பயணம் செய்த கார் மீது துப்­பாக்கி வேட்­டுகள் தீர்க்­கப்­பட்­டுள்­ளன.

அந்தக் கார் குண்டு துளைக்­காத கார் என்­பதால் காலிதா ஸியா எது­வித பாதிப்­பு­மின்றி உயிர்தப்பியதாக அவரது தனிப்பட்ட செயலாளர் ஷிமுல் பிஸ்வாஸ் தெரிவித்தார்.