ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட மாநாடு!

SLMC-logo

முதலமைச்சர்  ஊடகப்பிரிவு 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட பிரமாண்டமான மாநாடு எதிர்வரும் 07.08.2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு வாழைச்சேனை வீசி பொது மைதானத்தில் இடம்பெறவிருக்கிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமதின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இப்பிரமாண்டமான மாநாட்டில் பிரதம பேச்சாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நீர்வழங்கல் வடிகலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான சட்டமுதுமானி ரவூப் ஹக்கீம் கலந்து கொள்ளவுள்ளதுடன், கட்சியின் அதியுயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தகள், கல்விமான்கள், உலமாக்கள், அபிமானிகள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.