இல்ஹாம் மரைக்கார் பதவியிலிருந்து இராஜினாமா !

Untitled-1

 

அபூ அதீப் 

முன்னால் போக்குவரத்து அமைச்சின் புத்தளம் மாவட்ட இணைப்பாளரும் , மனித உரிமைகள் அமைப்பின் இணைப்பாளரும் , பிரபல கல்விமானும் ஆகிய இல்ஹாம் மரிக்கார் அவர்கள் 03.08.2015 அம் திகதி அப்பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பல போராட்டங்களுக்கு மத்தியில் இது வரை யாரும் பெறாத இவ்வாறான ஒரு பதவியை பெற்ற போதும் இதனால் புத்தளம் பகுதி இளைஞ்சர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை க்கூட பெற்று கொடுக்க முடியாத ஒரு நிலை காணப்பட்டதாலும் , தொடர்ந்து வேலை வாய்ப்பு , அபிவிருத்தி விடயங்களில் புத்தளம் மாவட்டம் புறக்கனிக்கபடுவதாலும் ஏற்பட்ட அதிருப்தியே இந்த இராஜினமாவுக்கு காரணம் என்றும் தெரிவித்தார்….

அவர் தொடர்தும் முஸ்லிம் காங்கிரசுடன் இருப்பதாகவும் அவர் கூறினார் .

இம்முறை நடைபெற இருக்கின்ற பாரளுமன்ற தேர்தல் களத்திலே சமூக பொறுப்புள்ளவர் களையும் , நேர்மையானவர்களையும் தெரிவு செய்யுமாறு நேற்று நடைபெற்ற ஆதரவாளர்களுக்காண கூட்டத்தில் அறிவித்தார் .