24 தங்க பிஸ்கட்டுகளுடன் அக்குறண பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது !

gold-bars

 

 மும்பையிலிருந்து சட்ட விரோதமான முறையில் ஒருகோடியே இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 தங்க  தங்க பிஸ்கட்டுக்களை கடத்தி வந்த சந்தேக நபர் ஒருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கத்திணைக்கள அதிகாரிகள் இன்று சனிக்கிழமை (01) கைதுசெய்துள்ளனர்.

 அக்குறண பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான மேற்படி சந்தேகநபரின் பயணப்பையிலிருந்தே  தங்கம் மீட்கப்பட்டுள்ளது.  மேலும், இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.