ரணில், சந்­தி­ரிகா, மைத்­திரி அணி­யுடன் சேர்ந்து ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து மஹிந்­தவை அனுப்பும் முயற்­சியில் சம்­பந்­தனும் ஈடு­பட்டார் என்­பது உண்­மையே !

இரு­பது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைத் தாருங்கள். 2016 இல் தீர்வைத் தரு­கிறோம் என்ற பாணியில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்­தி­ருக்கும் கருத்து மீண்டும் ஒரு தடவை தமி­ழர்­களை உசுப்­பேத்தி, நம்­ப­வைத்து வாக்­கு­களைச் சுரண்டும் தந்­தி­ர­மின்றி வேறில்லை என  ஜன­நா­யகப் போரா­ளிகள் கட்­சியின் ஒருங்­கி­ணைப்­பா­ளரும் ஊட­க­வி­ய­லா­ள­ரு­மான என்.வித்­தி­யா­தரன் குற்றம் சுமத்­தி­னார்.

2016 இல் தீர்வைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான தனது திட்டம், தந்­தி­ரோ­பாயம், உத்தி குறித்­தெல்லாம் வெளிப்­ப­டை­யாக எதுவும் சொல்­லாமல் மீண்டும் ஒரு தடவை ஏமாற்று வாக்­கு­று­திகள்  மூலம் பாராளு­மன்றக் கதி­ரை­களைக் கைப்­பற்ற அவர் எத்­த­னிக்­கின்றார்.

 யாழ்ப்­பாணத் தேர்தல் மாவட்­டத்தில் அந்தக் கட்­சியின் சார்பில் சுயேச்சைக் குழு­வாக சிலந்திச் சின்­னத்தில் போட்­டி­யிடும் அணியின் தலைமை வேட்­பா­ள­ரான அவர், இவ் விடயம் குறித்து மேலும் தெரி­வித்­தவை வரு­மாறு, 

பாரா­ளு­மன்றக் கதி­ரை­களை அடையும் நோக்­கோடு தமி­ழர்­க­ளுக்குத் தனி­நாடு என்ற உசுப்­பே­த்­தலை எழு­ப­து­களில் முன்­வைத்த மித­வாதத் தலை­வர்கள், அந்த இலக்கை அடை­வ­தற்­காக எது­வுமே செய்­ய­வில்லை. வெற்றுக் கோஷங்­களை முன்­வைத்து, இளை­ஞர்­க­ளையும் மக்­க­ளையும் தூண்­டி­விட்டு தாங்கள் பதவி சுகம் அனு­ப­வித்­த­மையைத் தவிர. அப்­போது முதல் ஒரு சில தமிழ்த் தலை­வர்கள் தாங்கள் ‘வாழ்நாள் எம்.பிக்­க­ளாக’ பத­வி­களை அலங்­க­ரித்துக் கொண்­டி­ருப்­ப­தற்­காக ஒவ்­வொரு தட­வையும் பாரா­ளு­மன்றத் தேர்தல் வரு­கின்­ற­போ­தெல்லாம் ‘ஐக்­கியம்’, ‘ஒற்­றுமை’, ‘ஒன்­று­பட்ட சக்தி’ என்­றெல்லாம் பேசு­வார்கள். இது வழமை இதைத்தான் இப்­போதும் செய்­கின்­றார்கள்.

தங்­க­ளுக்குள் ஒன்­று­பட்டு ஓர் அர­சியல் கட்­ட­மைப்­பையே நிறுவி அதனைக் கொண்டு நடத்த லாயக்­கற்­ற­வர்கள்  மக்­களைப் பார்த்து நீங்கள் ஒன்­று­பட்டு எங்­க­ளுக்கு வாக்­க­ளி­யுங்கள், தீர்வைத் தரு­கிறோம் எனப் பூச்­சாண்டி காட்ட முயல்­கி­றார்கள். எழு­ப­து­களின் இறு­தி­யிலே யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற மே தினக் கூட்டம் ஒன்றில் பேசிய தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் அமிர்­த­லிங்கம், ‘அடுத்த மேதினம் தமி­ழீ­ழத்தில்’ என்று அறி­வித்தார். அதே­பா­ணியில் இப்­போது சம்­பந்தன் அடுத்த ஆண்டு நடுப்­ப­கு­திக்குள் – 2016 இல் – தீர்வு என அறி­விக்­கின்றார்.

ரணில், சந்­தி­ரிகா, மைத்­திரி அணி­யுடன் சேர்ந்து ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து மஹிந்­தவை அனுப்பும் முயற்­சியில் சம்­பந்­தனும் ஈடு­பட்டார் என்­பது உண்­மையே. அவர் அன்று என்ன முடிவை எடுத்­தி­ருந்­தாலும், அதற்கு முன்­னரே மஹிந்­தவை வீட்­டுக்கு அனுப்­பு­வதில் தென்­னி­லங்­கை­யுடன் ஒன்­று­ப­டு­வது என்ற தீர்­மா­னத்தை வடக்கு, கிழக்குத் தமி­ழர்கள் எப்­போதோ – சம்­பந்தன் அணி அந்தத் தீர்­மா­னத்தை அறி­விப்­ப­தற்கு முன்­னரே – எடுத்­து­விட்­டனர்.

ஆனால், இப்­போது தென்­னி­லங்கை நிலைமை மாறி­விட்­டது. ரணில் – மைத்­திரி தரப்­புக்கு பெரும் சவால் விடும் அர­சியல் தலை­மை­யாக மீண்டும் மஹிந்த கிளம்­பு­கின்றார் என்று தென்­னி­லங்கை செய்­திகள் கூறு­கின்­றன. அதை மீறி ரணில் – மைத்­திரி தரப்பு பாராளு­மன்ற தேர்­தலில் முன்­ன­ணிக்கு வந்­தாலும் அந்தத் தரப்­பினர் பாரா­ளு­மன்­றத்தில் சாதா­ரண பெரும்­பான்­மையைத் திரட்டி அரசு அமைப்­பது கூட கஷ்­ட­மான விடயம் என்றே ஆரூடம் கூறப்­ப­டு­கின்­றது.

தமி­ழர்­க­ளுக்கு இணக்­க­மாக ஒரு தீர்வு எட்­டப்­பட வேண்­டு­மானால் அதை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு  அர­சியல­மைப்பு மாற்­றப்­பட அல்­லது திருத்­தப்­பட வேண்டும். தனித்துப் பெரும்­பான்மை பெறவே அல்­லாடும் ஓர் அர­சியல் தலை­மையைத் தென்­னி­லங்­கையில் வைத்­துக்­கொண்டு அர­ச­மைப்பை மாற்­று­வ­தற்­கான மூன்றில் இரண்டு பங்கு ஆத­ரவை – அதுவும் கடும் இன­வாதப் போக்­குடன் மஹிந்த தரப்பு நாடா­ளு­மன்­றத்தில் கணி­ச­மான இடத்­தைப்­பெ­றலாம் என்று கணிக்­கப்­படும் சூழலில் – பெறு­வது எங்­ஙனம்?
அதைப்­பற்­றி­யெல்லாம் எதுவும் விளக் கம் தராமல் இரு­பது எம்.பிக்­களைத் தாருங்கள், அடுத்த ஆண்டில் தீர்வு என்ற சம்­பந்தனின் பேச்சு மந்­தி­ரத்தில் மாங்காய் பறிக்கும் சுத்­து­மாத்­தின்றி வேறில்லை.

மீண்டும் ஒரு தடவை பொதுத் தேர்­தலில் மக்­களைச் சந்­திக்கும் உத்­தேசம், – தேவை, -எதிர்­பார்ப்பு – வாய்ப்பு – சம்­பந்தனுக்கு இல்­லாமல் இருக்­கலாம். அத­னால்தான் திரும்­பவும்  மக்­களைச் சந்­தித்து வாக்குக் கேட்­க­வேண்டி நேராது எனக் கருதி எதுவும் பேசலாம், எப்­ப­டியும் வாக்­கு­றுதி வழங்­கலாம் என்று நினைத்து இப்­படி ஓராண்டு காலக்­கெடு குறிப்­பிட்டு, நம்­பிக்கை ஊட்டி, இந்தத் தடவை மீண்டும் வாக்­குத்­தி­ரட்டி பத­வி­களைப் பிடித்­துக்­கொள்­ளலாம் என்று எண்ணிக் கரு­ம­மாற்­று­கின்றார் போலும் அவர். ஆனால் மீண்டும் ஒரு தடவை பொதுத்­தேர்­தலில் பொது­மக்­களைத் தாங்கள் சந்­திக்­க­வேண்­டி­யி­ருக்கும் என நம்பும் ஏனைய கூட்­ட­மைப்பு தலை­வர்கள் இந்த 2016 காலக்­கெடு விட­யத்தை அமர்த்தி – அமுக்கி – வாசிக்­கின்­றார்கள். அது குறித்துப் பேசு­வ­தில்லை.

ஜன­நா­யக வழிக்குத் திரும்­பி­யுள்ள விடு­தலைப் புலி­களை தமிழ்க்­ கூட்­ட­மைப்பில் சேர்த்தால் தென்­னி­லங்­கையில் இன­வாதம் தமி­ழ­ருக்கு எதி­ராகக் கிளம்­பி­விடும். மஹிந்த ராஜபக்‌ஷ அதையே இனவாதமாக்கி தென்னிலங்கையில் விஸ்வரூபம் எடுத்து விடுவார் என்றெல்லாம் கூட்டமைப்புத் தலைவர்கள் கூறினார்கள்.
ஆனால் புலிகள் ஜனநாயக வழிக்குத் திரும்பியமையை மஹிந்த உட்பட தென்னிலங்கையில் யாரும் இதுவரை இன வாத மாக்கவில்லை. ஒட்டுமொத்த தென் னிலங்கையே புலிக ளின் அந்த முடிவை வரவேற்கின்றது. மாறாக கூட்டமைப் பின் தேர்தல் விஞ்ஞா பன அறிவிப்புத்தான் தென்னி லங்கையில் பேரினவாதக் கிளர்ச் சியைத் தூண்டிவிட்டி ருக்கின்றது. – என்றார் அவர்.