பிரதம வேட்­பா­ள­ராக சந்­தி­ரிகா?

chandrika-k-asian-tribune

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அந்­தக்­கட்சி வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரிய வரு­கி­றது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவை சுதந்­திர கட்­சி­யி­லி­ருந்து ஓரம் கட்டும் வித­மா­கவே கட்­சிக்குள் இத்­தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிய வரு­கி­றது. இது தொடர்­பாக அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து மேலும் தெரிய வரு­வ­தா­வது,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­வ­தற்கு வாசு, தினேஷ், விமல் மற்றும் கம்­மன்­பில, பிர­சன்ன ரண­துங்க உட்­பட குழு­வினர் கடந்த காலங்­களில் முயற்­சி­களை மேற்­கொண்டு வந்­த­தோடு, மஹிந்­த­விற்கு ஆத­ர­வாக பொது கூட்­டங்­க­ளையும் நடத்­தி­யோடு மஹிந்­தவும் ஜனா­தி­பதி தேர்­தலின் தோல்­விக்கு பின்னர் ஒதுங்­கி­யி­ருக்­காது விகா­ரை­களில் நடை­பெறும் விழாக்­க­ளிலும் மற்றும் மத அனுஷ்­டா­னங்­க­ளிலும் கலந்­து­கொண்­ட­தோடு அவ்­வப்­போது ஊட­கங்­க­ளுக்கு கருத்­துக்­க­ளையும் வெளி­யிட்டார்.

கொழும்பு நாரன்­ஹேன்­பிட்டி அப­ய­ராம விகா­ரையில் மஹிந்­த­வுக்கு என தனி­யான அலு­வ­ல­கமும் வழங்­கப்­பட்­டுள்­ளது. மறு­புறம் ஏ.எஸ்.பி. லிய­ன­கே­வுக்கு சொந்­த­மான பீகொக் மாளி­கை­யையும் மஹிந்த தங்­கு­வ­தற்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தோடு அங்கு தற்­போது யாகங்­களும் நடை­பெற்­றுள்­ளன.

இவ்­வாறு மீள அர­சியல் பிர­வே­ச­வத்­திற்­கான அனைத்து முயற்­சி­க­ளையும் மேற்­கொண்டு வரும் சூழ் நிலை­யி­லேயே, நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை குறைக்கும் 19ஆவது திருத்­தத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அரசு முன்­வைத்­தது.

இதற்கு ஆத­ரவு வழங்­கு­வது தொடர்­பாக அரசின் பங்­காளிக் கட்­சி­யான ஹெல உறு­மய மற்றும் சுதந்­திர கட்­சியின் சிலரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சிலரும் முரண்­பா­டுகள் தலை­தூக்­கின.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பும், ஜே.வி.பி.யும் இதற்கு ஆத­ரவை வெளி­யிட்­டன. இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவு 19 க்கு ஆத­ரவு வழங்கா விட்டால் பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தாக அறி­வித்தார்.

இதன் பின்னர் கல­வ­ர­ம­டைந்த சுதந்­திர கட்­சி­யினர் ஜனா­தி­ப­தியை சந்­தித்து 19 க்கு ஆத­ரவு தெரி­விக்­கவும் அத்­தோடு 20 ஆவது திருத்­த­மாக தேர்தல் முறை­மையில் மாற்­றத்­தையும் கொண்டு வந்து நிறை­வேற்ற இணக்கம் தெரி­வித்­தனர்.

ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொது செய­லா­ளரும், அமைச்­ச­ரு­மான சம்­பிக்­கவும் திருத்­தங்­க­ளு­ட­னான ஆத­ர­வுக்கு இணக்கம் தெரி­வித்­துள்ளார்.
இவ்­வா­றா­னதோர் நிலை­யி­லேயே மஹிந்­தவை சுதந்­திர கட்­சி­யி­லி­ருந்து ஓரம் கட்டும் நட­வ­டிக்­கைகள் முடுக்கி விடப்­பட்­டுள்­ள­தோடு பொது தேர்­தலில் சுதந்­தி­ர­கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக சந்­தி­ரிகா போட்­டி­யிட தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­து.