குற்றச்சாட்டுக்களை சுமத்துவதும் சட்டத்தை அமுல்படுத்துவதும் அரசியல் சூதாட்டமாக மாறியுள்ளது : JVP

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பதவியில் இருந்த குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 

குற்றச்சாட்டுக்களை சுமத்துவதும் சட்டத்தை அமுல்படுத்துவதும் அரசியல் சூதாட்டமாக மாறியுள்ளது எனவும் நளின் ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் புதிய விதத்தில் மேற்கொள்ளப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த குற்றம் சுமத்தியுள்ளார்.