‘கல்’யாணம்

பொலிவூட் நடிகை போல்
பொலிவுடன் இருக்கிறாள்.
கலியாணம் முடித்தால்
ஜொலியாகும் என்று
முடிச்சு வாழ்கிறார்.
மூன்றே வருடத்தில்
பொடிச்சியாய் இருந்தவள்
பூதமாய்ப் போகிறாள்.

அறிவுக் கொழுந்து.
ஆங்கிலம் பேசுறா.
சரியான சோடின்னு
சட்டென்று முடித்தவர்
கறி புளி ஆக்க
தெரியாத அறிவால்
சொறிகிறார் தலையை
சொறிதமாய் ஜீவித.

பேஷ்புக்கில் பிரண்டாய்
‘பேஷா’ப் பழகினா
பேசும் சொற்களில்
பாசம் கொட்டும்
ஆசைப் பட்டு
ஐயா முடிச்சிட்டு
அகவுண்டப் பார்த்தால்
ஆயிரம் சற்றிங் 
அடுத்தவர்களோடும்

இவளை முடித்தால்
இவ்வளவு கிடைக்கும்
கவலை இன்றிக்
காலம் கழியும்.
இப்படி நினைத்து
இரு மணம் இணைந்தவர்
அப்படியே இழந்தார்
அவரிடம் இருந்ததும்.

போடியார் குடும்பம்
பொலிடிக்கல் செல்வாக்கு
கூட இருக்குது
குடும்பத்துக்காக
நாடி முடித்த பின்
நாடி விழுந்திட்டு
போடியின் ஆட்களின்
புறக்கணிக்கிறார் இவரை.

திருமணம் முடிக்கனும்
தீ(th)னுள்ள பெண்ணை
பெரு நபி சொன்னாங்க
பிரச்சினை தவிர்க்கவே
அழகு குடும்பம்
ஆற்றல் ஆஸ்தி
உள்ள பெண்ணும்
உள்ளத்தில் வாழ்வாள்
அள்ளாஹ்வின் அச்சம்
அவளிடம் இருந்தால்.
(நிஷவ்ஸ் – 03/02/2017)