யாழில் உண்ணாவிரதப் போராட்டம்

 

பாறுக் ஷிஹான்-
வடக்கில்  கடந்த காலத்தில் இடம்பெற்ற  யுத்தத்தின்போது கடத்தப்பட்டு  காணாமற் போன உறவுகள் தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமான பதிலைத் தரவேண்டுமென வலியுறுத்தி   நல்லூர் ஆலய முன்றலில் இன்றைய தினம்(26) உண்ணாவிரத போராட்டம்  நடைபெறுகின்றது.
குறித்த போராட்டமானது வடக்கில் காணாமற் போனோர் பாதுகாவலர் சங்கதினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் வடக்கில் யுத்த காலத்தில் காணாமற் போன நபர்களின் உறவுகளால் காலை 9 மணி முதல் மாலை 4 வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப் போராட்டத்தில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையினரும் இணைந்த தமது  ஆதரவுகளை வழங்கியுள்ளனர்