பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும தற்கொலை முயற்சி!

கடந்த சில தினங்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும இன்று பகல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

11750738_428113894039231_3299101065214926433_n

இதனால் காயமடைந்த பிரதியமைச்சர் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். 

மீகஹதென்ன ஆரம்ப பாடசாலையிலேயே பிரதி அமைச்சர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். 

10 மாணவர்களை மீகஹதென்ன ஆரம்ப பாடசாலையில் 01ம் தரத்திற்கு இணைத்துக் கொள்ள முடியாமல் போனதற்காக, கடந்த 27ம் திகதி முதல் மத்துகம வலயக் கல்வி காரியாலயத்திற்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. 

அந்த மாணவர்கள், பெற்றோர்களும் மேற்கொண்டுள்ள இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவும் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.