குட்டி யானையை அதன் குடும்பத்திடமிருந்து பிரித்த ஜனாதிபதி : வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் !

nandhi-elephant
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ அவர்களுக்கு இலங்கை அரசு ஒரு குட்டி யானையை பரிசாக அளிக்க முடிவு செய்திருப்பதை வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் நடந்த ஒரு விழாவில் ஜோன் கீயிடம் இந்த யானைக்கான உரிமப் பத்திரத்தை வழங்கினார். 

இந்த நடவடிக்கையை விமர்சித்த வன விலங்கு ஆர்வலர்கள் ஐந்தே வயதான இந்த குட்டி யானையை அதன் குடும்பத்திடமிருந்து பிரிப்பது என்பது கொடுமையானது என்று கூறினர். 

நந்தி என்ற இந்த யானையை நியூசிலாந்தில் இருந்து வந்த விலங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததாக செய்திகள் கூறுகின்றன. 

இலங்கையில் பொதுவாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குப் பழகிய யானைகள் நியுசிலாந்து போன்ற சராசரி 15 டிகிரி வெப்பநிலை நிலவும் நாடுகளில் வாழத் தொடங்குவது அதிர்ச்சியாக இருக்கும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் கூறுகிறார்கள். 

இலங்கை யானைகளைப் பரிசாக அளிக்கும் ஒரு நீண்ட கால வரலாறு கொண்டது. 

சீனா, ஜப்பான், தென் கொரியா, செக் குடியரசு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இலங்கை இது போல யானைகளைப் பரிசாக கொடுத்திருக்கிறது.