ஹுசைன் வட மாகாண சபை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சந்திப்பு !

a

இலங்கையை  நேற்று சென்று அடைந்த, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் இன்று 07-02-2016 காலை யாழ்.குடாநாட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை காலை 9.30 மணியளவில் முதலமைச்சரது உத்தியோகபூர்வ காரியாலயத்தில் சந்தித்து விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இவ்விசேட சந்திப்பில் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு விடயங்கள், வடக்கு முதல்வரால்  சுட்டிக்காட்டப்பட்டன. இதில் காணாமல்போனோர், தமிழ் அரசியல்கைதிகள், காணி அபகரிப்புக்கள் மற்றும் மாகாண அபிவிருத்திக்கான நிதிப்பற்றாக்குறை போன்ற முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.