அரசாங்கத்தின் அனைத்து உற்சவங்களையும் புறக்கணிக்க தீர்மானம் :தினேஸ் குணவர்த்தன

 

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் அனைத்து உற்சவங்களையும் புறக்கணிக்கப் போவதாக, பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

Unknown

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

மேலும் ஹிருணிகா பிரேமச்சந்திரவைக் கைதுசெய்ய சட்டமா அதிபரின் கடிதம் வழக்கப்பட்டது, யோசித்த ராஜபக்ஷவை கைதுசெய்ய அவ்வாறான கடிதம் கிடைக்கவில்லை எனவும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தினேஷ் குணவர்த்தன, சுதந்திர தின நிகழ்வுகளும் அரச நிகழ்வு என்பதால் அதனையும் புறக்கணிக்கப் போவதாக கூறியுள்ளார்.