கடதாசி ஆலை ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்கின்றது !

அசாஹீம்

 வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாத சம்பளமும் முப்பது வீத நிலுவையும் வழங்கப்பட வில்லை என்று கடந்த 18.09.2015ம் திகதி தொடக்கம் கடதாசி ஆலைக்கு முன்பாக அமைதியான முறையில் நடாத்தி வந்த ஆர்ப்பாட்டம் இன்று (30.09.2015) ஆலையின் கூரையின் மேல் ஏறி தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்ததுடன் டயர்களை எறித்தும் கூச்சல் எழுப்பினர்.

J_Fotor
கடந்த ஜூலை மாத சம்பளம் இரண்டு தடவைகளில் 70 வீதம் வழங்கப்பட்டதுடன் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுமாக இரண்டு மாதத்திற்கான சம்பளமும் 2014ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான சம்பள நிலுவை உட்பட நான்கு மாத முழுச் சம்பளமும் 30 வீத நிலுவையும் வழங்;கப்பட வேண்டிய நிலையிலயே ஊழியர்கள் கடந்த 18.09.2015 தொடக்கம் ஆலைக்கு முன்னாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலயே இன்று ஆலையின் கூறையின் மேல் ஊழியர்கள் ஏறி தங்களது சம்பளம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பினைத் தெரிவித்ததுடன் டயர்களையும் எரி;த்து எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

K_Fotor