மாற்று திறனாளிகளுக்கு நிதி உதவி வழங்கி வைப்பு !

1_Fotor

சமூக சேவைகள்  அமைச்சு நாடு பூராகவும்  பிரதேச செயலாளர்கள் விரிவில் உள்ள மாற்று திறநாளிகளை அடையாளம் கண்டு அவர்களின் உடல் உள நலனை மேன்படுத்தும் நோக்குடன் மாதாந்தம் 3000 ரூபா கொடுப்பனவை வழங்கி வருகின்றது .அதன் அடிப்படையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்  பிரிவில் 50  மாற்று திறநாளிகள் பல வருடங்களாக பயன் அடைந்து வருகின்றனர்.

 2015 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அணைத்து மாற்று  திறநாளிகளுக்கும்  இக்கொடுப்பனவை வழங்க சிபாரிசு செய்யப்பட்டதை அடுத்து அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட 36 மாற்று திறநாளிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட் கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமூக சேவை அவிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.சுல்பிகார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பிரேதேச செயலாளர் ஐ.எல் .ஹனிபா பிரதமே அதிதியாகவும் உதவி பிர தேச செயலாளர் எஸ். டி. அதிசய ராஜ் சிறப்பு அதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

2_Fotor