மக்கள் ஆணை தந்தால் நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறத்தயார் – முன்னாள் உதவி தவிசாளர் அமானுல்லா

a-2_Fotorஅபு அலா –

எனக்கு நீங்கள் தந்த ஆணையால்தான் கடந்தகாலம் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் உதவி தவிசாளராக இருந்து வந்தேன். அதேபோல் நீங்கள் இன்று ஆணை தந்தால் நான் அரசியலில் இருந்து ஓய்வுபெற தயாராகவும் இருக்கின்றேன் என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் எ.எல்.அமானுல்லா தெரிவித்தார்.

இன்று காலை (26) ஒலுவிலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நான் பதவி ஆசை கொண்டவனல்ல எனக்கு பதவி ஆசை இருக்குமாக இருந்தால் எமது பிரதேசத்தில் அமைக்கப்பட்ட மத்திய குழுவின் தலைவராக வந்திருப்பேன். நான் மத்திய குழுத் தலைவராக வரவேண்டும் என்று நீங்கள் பல முயற்சிகள் செய்தும் நான் அதற்கு முன்வராமல் மற்றயவர்களுக்கு இடம்கொடுத்தேன். அப்படி இடம்கொடுத்தும் அவர்கள் தங்களின் பதவிகளுக்கெற்றாப்போல் கடமைகளை சரிவர செய்யவில்லை.

மத்திய குழுவின் இந்த செயற்பாட்டினால் இன்று ஓலுவில் பிரதேசம் பல நஷ்டங்களை எதிர்கொண்டுள்ளது. அவர்களின் இச்செயலை எண்ணி நான் வெட்கப்படுகின்றேன். அவர்கள் செய்த தவறுகளுக்காக நான் உங்களிடம் பகிரங்க மன்னிப்பும் கோருகின்றேன்.

கடந்த மாதம் நீர் வளங்கள் வடிகாலமைப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட நியமன விடயத்தில் நமது ஒலுவில் மத்திய குழுவினர் தீவிர செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் இன்று பலபேர் தொழில் வாய்ப்புக்களை பெற்றிருப்பார்கள். அவர்கள் அவ்வாறில்லாமல் அசமந்தப்போக்கில் செயற்பட்டதால் எமது ஒலுவில் பிரதேசம் 3 பேருக்கான நியமனங்களையே பெற்றது. அதுவும் எனது முயற்சியினாலேயே கிடைக்கப்பெற்றது என்பதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். என்றார்.

b_Fotor