அமீர் அலியின் வெற்றியை உறுதிப்படுத்த இணைந்து கொண்டார் முஸ்லிம் காங்கிரஸ் உயரபீட உறுப்பினர் ஹுசைன்.

 அஹமட் இர்ஸாட்
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினரும் 2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யனைச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட எம்.பிஎஸ்.ஹுசைன் கல்குடா தொதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் முன்னாள் பிரதி அமைச்சரும், கட்சியின் தேசிய தவிசாளருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் பாராளுமன்ற வெற்றியினை மேலும் உறுதிபடுத்தும் முகமாக அவருடை வீட்டில் வைத்து அமீர் அலியுடன் கைகோர்த்து இணைந்து கொண்டார். இதற்கு முன்பு ஹுசைனுடைய மூத்த சகோதரரும் பொலன்னறுவை வீனஸ் தனியார் வைத்திய சாலையின் நிறைவேற்று பணிப்பாளருமான எம்.பி.எம்.அஜ்வாத்தும் அமீர் அலியின் வெற்றிக்காக கைகோர்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்