விபத்து !

image

ரிஷ்னாத்

நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி எரிவாயு சிலிண்டர்களை கொண்டு சென்ற லொறி ஒன்று 25.07.2015 அன்று பிற்பகல் 02.00 மணியளவில் நுவரெலியா அட்டன் பிரதான வீதியின் இரதலை குறுக்கு வீதியில் சமர்செட் பகுதியில் பிரதான வீதியை விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் சாரதியும் மற்றொருவரும் படுங்காயம்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணத்தினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி எரிவாயு சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.