ஈராக்கில் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் 120 பேர் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர் !.

image

ஈராக்கில் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் 120 பேர் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர்.

ரமழான் பண்­டிகை நாளில் ஈராக், டியாலா மாகா­ணத்­தி­லுள்ள கான் பெனிசாத் நகர் சந்தைப் பகு­தியில் தீவி­ர­வா­திகள் கார் வெடி குண்டு தாக்­கு­தலை நடத்­தி­யுள்­ளனர்.

தற்­கொலைப் படை தீவி­ர­வா­திகள் நடத்­திய இந்த கார் வெடி குண்டு தாக்­கு­தலில் 120 அப்­பாவிப் பொது­மக்கள் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர். மேலும் இந்த தாக்­கு­தலில், 150க்கும் மேற்­பட்டோர் படு­கா­ய­ம­டைந்து மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.