ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க எத்தகைய தியாகங்களையும் செய்யத் தயார் : மஹிந்த ராஜபக்சே !

Mahinda-Rajapaksa_2827824b_11

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கன்னித் தேர்தல் பிரசாரக்கூட்டம்  நேற்று அநுராதபுரம் – சல்காது மைதானத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் ஜயஸ்ரீ மஹா போதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

“நாட்டிற்கு உயிர் கொடுப்போம் – புதிதாக ஆரம்பிப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கன்னிக் கூட்டம் இன்று இடம்பெற்றது.

இதன் போது நீதியானதும் நியாயமானதுமான தேர்தலுக்காக உறுதிமொழி வழங்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, மே மாதம் 18 ஆம் திகதி சுதந்திரத்தின் மகிழ்ச்சியைக் கொண்டாட தேசியக் கொடியைக் கையில் எடுத்துக்கொண்டு வீதியில் இறங்கியவர்கள் அதே கைகளினால் தன்னை வெளியில் அனுப்பியதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க எத்தகைய தியாகங்களையும் செய்யத் தாம் தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மக்கள் மத்தியில் தெரிவித்தார்.