ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு புதிய தொகுதி அமைப்பாளர் நியமனம் !

Maithri-new

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு புதிய தொகுதி அமைப்பாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

முல்கிரிகல பகுதிக்கான தொகுதி அமைப்பாளராக நிருபமா ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் தொகுதி அமைப்பாளராக விக்டர் அன்ரனியும், களனி பகுதிக்கு திலக் வராகொடயும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புளத்சிங்கள தொகுதி அமைப்பாளராக ஆர்.பி. துஸித்த குலரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.