‘நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பேன் என கூறப்பட்டபோதும் சில அதிகாரங்கள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளன : ஹக்கீம் !

11702701_1697576837142324_4811522791025401645_n_Fotor

 

நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பேன் என கூறப்பட்டபோதும் தற்போது அதில் சிறிது மாத்திரமே குறைக்கப்பட்டுள்ளது  என தெரிவித்துள்ள ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி வழங்கி வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 தான் கொடுத்த வாக்குறுதிகளில் சிறிய  அளவை மட்டுமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றியுள்ளார். பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பூரணமாக நிறைவேற்றப்படும் என தான் நம்புவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

 கண்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பேரணியில் கலந்துகொண்ட போது, அவர் இதனை கூறியுள்ளார். ‘நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பேன் என கூறப்பட்டபோதும் சில அதிகாரங்கள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளன. வரம்புக்குட்பட்ட பலம் மாத்திரம் குறைக்கப்பட்டுள்ளது.

 ஒன்றை செய்து ஒன்றை மறைக்கின்றனர், ஆனால், வாக்குறுதி அளித்தால் அதனை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும்’ என அவர் மேலும் கூறியுள்ளார்.