சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சவளக்கடை பொலிஸாரும் வேல்ட் விஸ்ஷன் நிறுவனமும் இணைந்து நடத்தும் விளையாட்டு நிகழ்வின் இன்று காலை மரதன் ஒட்டம் சிறப்பாக நடைபெற்றது.
சவளக்கடை பொலிஸ் நிலையத்திற்கு முன்பா ஆராம்பமாகி சவளக்கடை தபால் நிலையத்தினை அடைந்து மீண்டும் சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் ஊடாக வீசீ சந்தியுடாக வேப்பயடி கலைமகள் வித்தியாலய மைதானத்திற்கு முன்பாக மரதன் ஒட்டம் நிறைபெற்றது.
பெண்களுக்கான மரதன் ஒட்டம் வீசீ சந்தியில் ஆராம்பமாகி வேப்பயடி கலைமகள் வித்தியாலய மைதானத்திற்கு முன்பாக மரதன் ஒட்டம் நிறைபெற்றது.
இவ் மரதன ஓட்டத்தினை சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆராம்பித்து வைத்தார்.
இதன்போது நாவிதன்வெளி பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுபபினரும் இளைஞர் சம்மேளனத்தின் தலைவருமான டீ.சுதன், நாவிதன்வெளி பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ், விளையாட்டு உத்தியோகத்தர் பீ.வசந்தன், பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.