தேர்தல் கள தீ சுவாலை !

2015-06-30_01_Fotor

எம்.ஜே. சுக்ரி 

“””அரசியல் ஞானம் தெரியாத சில அல்லக்கைகள் இன்னும் விமர்சிப்பதிலேயே காலத்தை ஓட்டுகிறது.மந்தப்புத்தியுள்ளவனோடு பேச விளைவது சொந்த செலவில் தனக்கு தானே சூனியம் வைப்பது போலாகிவிடும். தேர்தல் சதுரங்கத்திலே இனி நடக்கப்போகும் சித்து விளையாட்டை அருகில் நின்று கைதட்டி வரவேற்க தயாராகும் கள நிலவரத்தில் பங்காளர்களாக பலர் மாறப்போகிறார்கள்.

ஊரானின் கோழியை அறுத்து உம்மாவுக்கு கத்தம் ஓதுகின்ற வேலையை சில அரசியல் வாணிபர்கள் செய்ய தயார்.தன்னலம் பேணாத தலைமையை காண்பது விசித்திரமே. சில மக்களின் மண்டையோட்டுக்குள் அல்லாஹ் மூளையை வைத்திருக்கிறானா இல்லை களி மண்ணை வைத்திருக்கிறானா என தெரியவில்லை.நன்கு சிந்தித்து வாக்குகளை பயன்படுத்துங்கள் என் நண்பர்களே.

யதார்த்ததத்தை சொல்ல விளைந்தால் நானும் அரசியல் அடையாள முத்திரை குத்தப்படலாம்.யதார்த்தவாதி வெகுசன விரோதியே…தடி எடுத்தவனெல்லாம் வேட்டைக்காரனாகும் ஆடு புலி ஆட்டம் ஆரம்பம்”””