வார இறுதி நாட்களில் வேட்புமனு, கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது !

srilanka01_Fotor-239x300 

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனு அல்லது கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த காலம் எதிர்வரும் திங்கட்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெறுவதாக தேர்தல்கள் செயலகம் முன்னர் அறிவித்திருந்தது.

கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுக்களை இறுதித் தருணத்தில் தாக்கல் செய்வதற்கு பலர் தயாராகவுள்ளமையால் சிக்கல்கள் தோன்றக்கூடும் எனவும் அதனால் கால தாமதப்படுத்தாமல் அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.