இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை !

 

Unknown

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த இலங்கை மீனவர்கள் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களும் கடற்படையினரால் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் நிமல் ஹெட்டிஆரச்சி கூறியுள்ளார்

பத்தலன்குண்டு பகுதி கடற்பரப்பிற்கள் நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதில்லை என இலங்கை மீனவர்கள் குற்றம் சுமத்திவருகின்ற நிலையிலேயே அவர் இந்த கருத்தினை வௌியிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் கைது செய்யப்பட்ட 40 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் இந்திக்க சில்வா தெரிவித்துள்ளார்.