நீதியரசருக்கு எதிராக நீதிமன்ற கட்டிடத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் !

imagesதன்னுடைய வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய பெண்ணின் மீது தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் அப்றூவை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி, உள்நாட்டு பெண்கள் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தோர் புதுக்கடை நீதிமன்ற கட்டடத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீதியரசரின் கடவுச்சீட்டை தடைசெய்யுமாறும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.