சரத் பொன்சேகாவுடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தை!

sarath-fonseka
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவுடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தம்மை சந்திக்க உள்ளதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலேயே இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட கட்சி தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் சுமார் 250 வேட்பாளர்களை களமிறக்க தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.