கல்முனை மாநகர சபையில் நிரந்தர நியமனம் பெற்ற ஊழியர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு !

Aslam moulana (1)_Fotor
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகர சபையில் 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றிய 19 ஊழியர்களுக்கு நேற்று முன்தினம் கிழக்கு மாகாண சபையினால நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுள் நூலக சேவகர் நியமனம் பெற்ற ஊழியர்கள், தமது நிரந்தர நியமனத்திற்காக நடவடிக்கை எடுத்தமைக்கு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை மாநகர முதல்வர் செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி அவர்களும் பங்கேற்றிருந்தார்.