ராஜிதவின் மகன் சவால் விடுத்தமையானது, பன்றிக்குட்டி, சிங்கத்தை பார்த்து சவால் விடுத்தமை போன்றது : மஹிந்த யாப்பா அபேவர்த்தன !

minister-lakshman-yapa-abeywardena
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சுகாதார அமைச்சரின் மகன் சவால் விடுத்தமையானது, பன்றிக்குட்டி, சிங்கத்தை பார்த்து சவால் விடுத்தமை போன்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

மாத்தறை பெலியத்தை தொகுதியில் தம்முடன் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா? என்று அமைச்சர் ராஜித சேனாரட்னவின் மகன் சத்துர, மஹிந்த ராஜபக்சவிடம் சவால் விடுத்திருந்தார்.

அவ்வாறு மஹிந்த போட்டியிட்டால், நாடாளுமன்ற பிரவேசித்தை மேற்கொண்ட பெலியத்தை தொகுதியிலேயே அவரின் அரசியலும் முடிவுக்கு வரும் என்றும் சத்துர குறிப்பிட்டிருந்தார். 

மஹிந்த ராஜபக்ச, நாட்டை காத்த வீரராவார். பொதுமக்கள் அவருக்கு மரியாதை வழங்குகின்றனர். 

இந்தநிலையில் பலரும் அவருக்கு சவால் விடுத்து வருகின்றனர். இது பன்றிக்குட்டிகள், சிங்கத்தை பார்த்து சவால் விடுகின்றமைக்கு சமனாகும் என்றும் அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.