பொதுத் தேர்­தலின் பின்னர் பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஆட்சி உரு­வா­வது நிச்­சயம். , இதனை எவ­ராலும் தடுக்க முடி­யாது : வாசு

 78992_vasudeva-nanayakkara--13---copy

பொதுத் தேர்­தலின் பின்னர் பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஆட்சி உரு­வா­வது நிச்­சயம். இதனை எவ­ராலும் தடுக்க முடி­யாது எனத் தெரி­வித்த முன்னாள் அமைச்­சரும் எம்.பி.யு­மான வாசு­தேவ நாண­யக்­கார, சுதந்­திரக் கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் போட்­டி­யிட வேண்­டிய நிலைமை மஹிந்­த­வுக்கு கிடை­யாது என்றும் அவர் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி மேலும் தெரி­விக்­கையில்,

சுதந்­திரக் கட்­சியில் அல்­லாது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லேயே பிர­தமர் வேட்­பா­ள­ராக மஹிந்த கள­மி­றங்க வேண்­டிய அவ­சியம் கிடை­யாது. அக் கட்­சி­களில் வேட்பு மனு வழங்­கப்­ப­டா­விட்டால் எத்­த­னையோ அர­சியல் கட்­சி­க­ளது அர­சியல் சின்­னங்­களின் கீழ் மஹிந்­தவை போட்­டி­யிடச் செய்­வ­தற்கு தயா­ரா­கவே உள்­ளன.

இவ்­வாறு ஒரு கட்­சியில் கூட்­ட­ணி­யாக இணைந்து மகிந்­தவை தலை­மைத்­துவ வேட்­பா­ள­ராக கள­மி­றங்கி பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­டுவோம். இதன் போது நிச்­சயம் மஹிந்த ராஜ­பக்ஷவெற்றி பெறுவார்.

அடுத்த பொதுத் தேர்­தலின் பின்னர் இந்­நாட்டின் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஹவே ஆகும். இதனை எவ­ராலும் தடுக்க முடி­யாது. பொதுத் தேர்­தலில் எமது பிர­தான எதிரி ஐ.தே கட்­சி­யாகும். அதற்கு எதி­ரா­கவே எமது தேர்தல் பிரச்­சார வியூகம் அமைக்­கப்­படும். அதே­வேளை ஐ.தே. கட்­சியும் சுதந்­திரக் கட்­சியும் இணைந்து கூட்­ட­ர­சாங்­கத்தை அமைக்க முயற்­சிக்கும்.

அவ்­வா­றா­னதோர் நிலையில் நாம் ஏனைய கட்­சி­யி­ன­ரோடு இணைந்து கூட்­ட­ர­சாங்­கத்தை அமைக்க முயற்­சிப்போம் என்றும் வாசு­தேச நாண­யக்­கார எம்.பி தெரி­வித்தார்.

இதே­வேளை மஹிந்த ராஜ­பக்ஷவை தேர்­தலில் பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­வ­தற்­கான அணி தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும். அது தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனமும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.