‘செயற்கை அலையில் பயணிக்கும் மஹிந்த’- ரணில்

ranil-wickramasinghe-1-colombo-telegraphதம்மை பிரதம மந்திரி வேட்பாளராக தெரிவு செய்யக்கோரி மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடம் கோருவது, செயற்கை அலையில் பயணிப்பதை போன்றது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த அலை விரைவில் குறைந்து போய் விடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அலரி மாளிகையில் செய்தியாளர் குழு ஒன்றை சந்தித்த போதே ரணில் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது ரணில் விக்கிரமசிங்க, அதிகமாக அரசியல் பேசவில்லை. அதற்கு பதிலாக செய்தியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கே அதிக நேரத்தை செலவிட்டார்.