தேர்தல் நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்போகும் ஐ.தே.க.!

download (3)
பொதுத் தேர்தலை அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுத் தேர்தல் நடத்தப்படாது போனால், மக்கள் சக்தி நடவடிக்கையை ஆரம்பிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

பொதுத் தேர்தல் எதிர்ப்பார்ப்பில் மக்களை அணித்திரட்டுவதற்காக இந்த நடவடிக்கையை ஆரம்பிக்க போவதாக அந்த கட்சி கூறியுள்ளது.

இதனை தவிர பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி நாட்டின் பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அன்னப்பறவை சின்னத்திற்கு நேரடியாகவும் முறைமுகமாகவும் ஆதரவு வழங்கிய கட்சிகளையும் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை பிரஜைகள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி மக்களை அணித்திரட்டும் வேலைத்திட்டங்களை தனித்தனியாக மேற்கொண்டு வருகின்றன.