20வது திருத்தம் தொடர்பில் விசேட வர்த்தமானி !

இலங்கையின் அமைச்சரவை அண்மையில் அங்கீகரித்த தேர்தல் தொடர்பான 20வது திருத்தம் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டதாக அரச அச்சகத்தரப்பு தெரிவித்துள்ளது.

 நாடாளுமன்றத்துக்கு 237 உறுப்பினர்களை தெரிவு செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.