நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி சாய்ந்தமருதில் கடையடைப்பு, துஆ பிராத்தனை, பிரகடனம் அமைதி ஊர்வலம் !

1_Fotor

எம்.வை.அமீர்

சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி  சாய்ந்தமருது பொதுமக்கள் அமைப்பு 2015-06-15 ல் சாய்ந்தமருது பிரதேசத்தில் முழுநாள் ஹர்த்தால், கடையடைப்பு செய்வதற்கு அழைப்பு விடுத்திருந்தது.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், வர்த்தக சங்கம் மற்றும் நிறுவங்கள், பொது அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுப்போக்குவரத்துக்கு பாதிப்பிலாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்விவிற்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்கள், கடைகள், தனியார் நிறுவங்கள் மூடப்பட்டிருந்ததுடன் பாடசாலைகள் மாணவர்களின் வருகையின்மையால் வெறிச்சோடிக்கிடந்தன.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஒன்றுகூடிய திரளான நகரசபைக் கோரிக்கையாளர்கள் தொழுகையிலும் துஆ பிராத்தனையிலும் ஈடுபட்டதுடன் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை பிரகடனம் ஒன்றும் செய்யப்பட்டதுடன் அமைதி ஊர்வலமும் இடம்பெற்றது.

3_Fotor 2_Fotor 6_Fotor 7_Fotor