‘புலம்­பெ­யர்ந்து வாழும் தமி­ழர்கள் பயங்­க­ர­வா­திகள் அல்லர்’ -மங்­க­ள­ச­ம­ர­வீர

mangalaபுலம்­பெயர் தமி­ழர்கள் என்­றதும் அவர்கள் புலி­க­ளா­கவும் பயங்­க­ர­வா­தி­க­ளா­க­வுமே சித்­த­ரிக்­கப்­ப­டு­கின்­றனர். புலம்­பெ­யர்ந்து வாழும் தமி­ழர்கள் பயங்­க­ர­வா­திகள் அல்லர். அவர்கள் கொம்பு முளைத்த பிசா­சு­க­ளு­மல்லர். அதேபோன்று சிவப்­புக்­குள்­ளர்­களும் இல்லை. இந்­நாட்டின் நற்­பெ­ய­ருக்கு இலக்­க­ணமாய் திகழும் அவர்­களை புறந்­தள்ளி புறக்­க­ணித்து எம்மால் செயற்­பட முடி­யாது என்று வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­க­ள­ச­ம­ர­வீர நேற்று சபையில் தெரி­வித்தார்.

 

டயஸ் போரா என்ற சொற்­ப­தத்­துக்குள் சிங்­கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என்ற மூன்று சமூ­கத்­தி­னரும் உள்­ள­டங்­கு­கின்­றனர். இவர்­களில் விஞ்­ஞா­னி­களும் வைத்­திய நிபு­ணர்­களும் பிர­பல வர்த்­த­கர்­களும் இன்னும் சிறந்த கல்­வி­மான்­களும் இருக்­கின்­றனர். அவர்கள் எமது நாட்­டுக்கு மீண்டும் வர வேண்­டி­ய­வர்கள் என்­பதால் புலம்­பெயர் சமூ­கத்­தி­னரை எமது அர­சாங்கம் அன்­புடன் வர­வேற்­கி­றது என்றும் கூறினார்.

புலம்­பெயர் தமி­ழர்கள் மீதான தடை­யா­னது அன்­றைய காலத்து தேர்தல் வெற்­றியை இலக்­காக வைத்து செயற்­ப­டுத்­தப்­பட்ட விடயம் என்­பதால் அவர்கள் மீதான தடை குறித்து மீளாய்வு செய்ய வேண்­டிய தேவை எழுந்­துள்­ளது என்றும் அமைச்சர் மங்­கள சம­ர­வீர இதன்­போது தெரி­வித்தார்.

வெளி­வி­வ­கார அமைச்­சரின் லண்டன் விஜ­யத்தின் போது அங்கு உலகத் தமிழர் பேர­வை­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தா­கவும் அது தொடர்­பி­லான தெளி­வு­ப­டுத்­தல்கள் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட வேண்டும் என்றும் எதிர்க்­கட்சித் தலைவர் நிமல் சிறி­பால டி சில்வா நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்தார்.

இதன்­போது மேற்­படி கேள்­விக்கு வெள்­ளிக்­கி­ழமை பதி­ல­ளிக்­கப்­படும் என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.இதன் பிர­கா­ரமே நேற்று வெள்­ளிக்­கி­ழமை அமர்வின் போது வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர பதி­ல­ளித்­தி­ருந்தார்.

அமைச்சர் தொடர்ந்து பதி­ல­ளிக்­கையில் கூறி­ய­தா­வது,

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தின் போது அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் நிறு­வப்­பட்­ட­தான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் விதப்­பு­ரை­களின் பிர­காரம் புலம் பெயர் சமூகம் குறிப்­பாக புலம்­பெயர் தமி­ழர்­க­ளுடன் நல்­லு­றவைப் பேணு­மாறு கூறப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி அவர்­க­ளது கருத்­துக்கள் உள்­வாங்­கப்­பட வேண்டும் என்றும் அவர்­க­ளுக்கு இருந்து வரு­கின்ற பிரச்­சி­னை­களை அறிந்து அவர்­களை உள்­நாட்டு பொரு­ளா­தார அபி­வி­ருத்திப் பணி­களில் இணைத்துக் கொள்­ளு­மாறும் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

மேற்­படி விதப்­பு­ரை­களின் பிர­கா­ரமும் வெளி­வி­வ­கார அமைச்சர் என்ற பொறுப்­பினை ஏற்­றி­ருந்­ததன் அடிப்­ப­டை­யி­லுமே நான் மேற்­படி புலம்­பெயர் சமூ­கத்­து­ட­னான பேச்­சு­வார்த்­தை­களில் கலந்து கொண்­டி­ருந்தேன்.

லண்­டனில் இடம்­பெற்ற இப்­பேச்­சு­வார்த்­தையின் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் உலகத் தமிழர் பேர­வையின் பிர­தி­நிதி சுரேன் சுரேந்­திரன் தேசிய நல்­லி­ணக்கக் குழுவின் பிரதி நிதி ஜய­சிங்க தென்­னா­பி­ரிக்கா பிரதி நிதி சுவிஸின் பிர­தி­நி­தி­யான டோனி ஹசன் நோர்வோ பிர­தி­நி­தி­யான எரிக்சொல் ஹெய்ம் உள்­ளிட்டோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இந்த சந்­திப்பின் போது புலம்­பெயர் சமூ­கத்­து­ட­னான தனது அனு­ப­வங்­களைப் பகிர்ந்து கொண்ட எரிக் சொல்ஹெய்ம் வெறும் இரண்டு மணித்­தி­யா­லங்­களே பங்­கேற்­றி­ருந்தார்.
இந்தப் பேச்­சு­வார்த்­தையின் போது புலிகள் மீதான தடையை நீக்­கு­வது தொடர்­பி­லான போர்க்­குற்­றங்கள் உள்­ளக விசா­ர­ணைகள் தொடர்­பிலோ எதுவும் பேசப்­ப­ட­வில்லை.

அதே போன்று அர­சியல் தீர்வு விவ­காரம் குறித்தோ பேசப்­ப­ட­வில்லை என்­ப­துடன் பிள­வு­ப­டாத இலங்கை ஐக்­கி­யத்­து­ட­னான செயற்­பாடு குறித்தே பேசப்­பட்­டி­ருந்­தது. அது­மட்­டு­மன்றி யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான உத­விகள் அவர்­க­ளுக்­கான வீட்டுத் திட்­டங்கள் அர­சியல் கைதி­களின் விடு­தலை என்­பவை தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.
இன்­றைய நிலையில் டயஸ் போரா என்­ற­ழைக்­கப்­ப­டு­கின்ற புலம்­பெயர் சமூ­கத்­தினர் தமிழ் சிங்­க­ளவர் மற்றும் முஸ்லிம் என மூன்று இனத்­த­வர்­க­ளையும் சேர்ந்த 15இலட்சம் பேர் வெளி­நா­டு­களில் வாழ்ந்து வரு­கின்­றனர்.

டயஸ் போரா எனும் போது அவர்கள் இலங்­கையில் இருந்து மட்­டு­மல்­லாது உலகின் வேறு பல நாடு­க­ளிலும் இவ்­வாறு புலம்­பெயர் சமூகம் வாழ்ந்து கொண்­டி­ருப்­பதை சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறேன்.

இங்கு டயஸ் போரா என்­றதும் புலம்­பெயர் தமிழர் புலம்­பெ­யர்ந்து வாழும் தமி­ழர்­களை புலி­க­ளாவோ அல்­லது பயங்­க­ர­வா­தி­க­ளா­கவோ சித்­த­ரிக்­கப்­ப­டு­கின்­றனர்.
புலம்­பெயர் தமி­ழர்­களைப் பொறுத்த வரையில் அவர்கள் புலி­களும் அல்ல தீவி­ர­வா­தி­களும் அல்ல அத்­துடன் அவர்கள் கொம்பு முளைத்த பிசா­சு­களும் அல்ல சிவப்­புக்­குள்­ளர்­களும் அல்ல.

எனவே டயஸ் போரா என்று விளிக்­கப்­ப­டு­கின்­ற­வர்­க­ளான புலம்­பெயர் தமி­ழர்­களை புதைத்­தள்ளி புறங்­க­ணித்து செயற்­ப­டு­வ­தற்கு நாம் தயா­ரில்லை.புலம்­பெ­யர்ந்து வாழும் மூன்று சமூ­கத்­த­வர்கள் வைத்­தி­யர்கள் விஞ்­ஞா­னிகள் வர்த்­தர்கள் கல்­வி­மான்கள் இருக்­கின்­றனர். மேலும் புலம்­பெயர் தமி­ழர்கள் என்­ற­வுடன் அவர்­களில் சிலர் அடிப்­ப­டை­வா­தி­க­ளாக இருக்­கின்ற போதிலும் அங்கு வாழ்­கின்ற ஒட்டு மொத்த தமி­ழர்­க­ளையும் அவ்­வாறு கணக்­கிட்டு விட முடி­யாது. பெரும்­பா­லானோர் இலங்­கையின் ஆட்­புல ஒரு­மைப்­பாட்­டுடன் இணைந்து ஐக்­கி­ய­மாக செயற்­படும் நிலைப்­பாட்டில் இருந்து வரு­கின்­றனர். உலக நாடு­க­ளுக்கே சவால் விடுக்கும் அள­வி­லான திற­மை­சா­லிகள் இருக்­கின்­றனர். எனவே அவர்­களை புறந்­தள்ளி விட நாம் தயா­ரில்லை. இலங்­கையின் அபி­வி­ருத்­தியில் அவர்­களை இணைத்துக் கொள்ள வேண்­டி­யுள்­ளது.

புலம்­பெயர் தமி­ழர்­க­ளுடன் மூன்று முதல் நான்கு தட­வை­களில் சந்­தித்து பேசி­யி­ருக்­கிறேன். அந்த வகையில் அவர்கள் தீண்­டத்­த­கா­த­வர்கள் அல்லர். அப்­ப­டி­யான பின்­தங்­கிய சிந்­த­னையை கைவிட்டு விட வேண்டும் என்ற வகை­யி­லேயே நாம் செயற்­ப­டு­கிறோம். இவ்­வாறு புதி­தாக சிந்­திப்­பதில் என்ன தவறு இருந்து விடப்­போ­கி­றது.

பழிக்­குப்­பழி என்ற சிந்­த­னையை கைவிட்டு ஐக்­கி­யத்­தைப்­பற்றி சிந்­திப்­பதும் புத்தர் காட்­டிய வழியில் பய­ணிப்­பதும் தவ­றாக இருக்க முடி­யாது. முன்­னைய அர­சாங்கம் இழைத்த தவ­று­களை நாமும் செய்­வ­தற்கு தயா­ரில்லை. புலம்­பெயர் தமி­ழர்­களை விரோ­தி­க­ளா­கவே பார்த்­தனர். இத­னா­லேயே பல்­வேறு விளை­வு­களை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. நட்பு நாடு­களின் ஆலோ­ச­னைகள் நிரா­க­ரிக்­கப்­பட்ட கார­ணத்தால் சர்­வ­தே­சத்தின் ஆத­ரவை இழக்க நேரிட்­ட­துடன் இலங்­கை­யா­னது சர்­வ­தே­சத்தின் மத்­தியில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட நிலையும் காணப்­பட்­டது.

இருந்த போதிலும் புலம்­பெயர் சமூகம் இலங்­கை­யுடன் இணைந்து செயற்­படும் அளவில் நாம் நிலை­மை­களை மாற்­றி­ய­மைத்­தி­ருக்­கின்றோம். அத்­துடன் சர்­வ­தே­சத்தின் மத்­தி­யிலும் நன்­ம­திப்பு கிடைத்­தி­ருக்­கின்­றது.

புலம்­பெயர் தமி­ழர்கள் மனதில் ஏற்­பட்­டுள்ள மாற்­றத்தை உலகத் தமிழர் பேர­வையின் தலைவர் வண பிதா இம்­மா­னுவேல் சமர்ப்­பித்­தி­ருந்த அறிக்கை மிகத் ் தெளிவான கருத்துக்களை முன்வைத்துள்ளது.

வண பிதா தனது அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிலர் தகாத கூற்றுக்களை முன்வைத்து வந்ததாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து மக்களுக்குமான பிரச்சினைகளின் காரணிகளைக் கண்டறிந்து சமாதானத்திற்கானதும் ஐக்கியத்துக்கானதுமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஐக்கியத்துக்கான நாடாகவே தமிழர்கள் பார்க்கின்றனரே தவிர பிளவுபட்ட இலங்கையை விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அந்த வகையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நல்லிணக்க முயற்சிகளுக்கு எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் லண்டனில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பான அறிக்கை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.