‘புதிய தேர்தல் முறை திருத்தம் குறித்து எந்த கருத்தையும் வெளியிட முடியாது’ -எம்.ஏ. சுமந்திரன்

download (3)
அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கிய 237 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் புதிய தேர்தல் முறை திருத்தம் குறித்து எந்த கருத்தையும் வெளியிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறை கீழ் ஏற்படுத்தப்படும் தொகுதிகள் பற்றி தெளிவாகியுள்ள போதிலும் அந்த தேர்தல் முறை பற்றி போதிய விளக்கம் இல்லை என்பதால், அது குறித்து எதனையும் கூறமுடியாது எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முற்பகல் கூடிய அமைச்சரவை 237 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் புதிய தேர்தல் முறை தொடர்பான 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அனுமதியை வழங்கியது.