தங்கம் மற்றும் மாணிக்கக்கற்களை சீனாவுக்கு கடத்த முயன்ற தம்பதியினர் கைது !

 சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து சீனாவிற்கு தங்கம் மற்றும் மாணிக்கக்கற்களை கடத்த முயன்ற தம்பதியினரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சீனாவில் இடம்பெறவுள்ள விற்பனை கண்காட்சியில் கலந்து கொள்வதற்காகவே இவர்கள் சீனாவிற்கு செல்லவிருந்தனர்.

இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் மற்றும் மாணிக்கக்கற்களின் பெறுமதி 10 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 25 ஆயிரம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.