இன்னும் இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கமே ஆட்சியில் இருக்கும் – சஜித்

sajith-preபொதுத் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் இன்னும் இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கமே ஆட்சியில் இருக்கும் என வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தொட்டையில் நேற்று (06) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பகல் கனவு காண்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இதன் போது கருத்து வெளியிட்ட  அமைச்சர் சஜித் பிரேமதாச;

தேசிய அரசாங்கம் தொடர்பில் எந்தவித ஒப்பந்தங்களும் இல்லை எனவும், அவ்வாறு இருந்தால் அதனை நாட்டிற்கு வெளிப்படுத்துமாறு தற்போதைய எதிர் கட்சி தலைவர் கூறுகின்றார், நிமல் சிறிபாலடி சில்வா தொடர்பில் நான் ஆச்சரியப்பட போவதில்லை. இந்த விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வு இல்லை.  ஏனெனில் ஜனாதிபதி தேர்தலில்  தோல்வியடைந்த பகுதியிலேயே நிமல் சிறிபாலடி சில்வா உள்ளார், ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றது மைத்திரிபால சிறிசேன என்பதை நிமல் சிறிபாலடி சில்வா மறந்து விட்டார்.