வேகத்துப்பாக்கிகளை பயன்படுத்த முடிவு !

நாட்டில் உள்ள பிரதான வீதிகளில் 86 வீதிகளில் வேகத் துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது. சாரதிகள் தங்களுடைய வாகனங்களின் வேகத்தை கட்டுப்பாட்டு மீறி செலுத்துவதனால் பல விபத்துகள் இடம்பெறுகின்றன. அவற்றை தடுக்கும் வகையிலேயே இந்த நடிவக்கை எடுக்கப்பட்டுள்ளது.  நீதிமன்ற தீர்மானத்துக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருக்கின்றது என்றும் அப்பிரிவு அறிவித்துள்ளது.