‘பிறைக் குழப்பமும், இரவு வணக்கமும்’ எனும் தலைப்பில் விஷேட தர்பிய்யா நிகழ்வு !

 
பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் நேற்று (05) வெள்ளிக்கிழமை இரவு விஷேட தர்பிய்யா நிகழ்வு ஒன்று காத்தான்குடி ஜாமிஉல் அதர் ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.
மேற்படி விஷேட தர்பிய்யா நிகழ்வில் ‘பிறைக் குழப்பமும், இரவு வணக்கமும்’ எனும் தலைப்பில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த மார்க்க அறிஞர் மௌலவி எஸ்.எம். அப்துல் ஹமீத் ஷரயியினால் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
இதில் அதிகமான ஆண், பெண் சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
DSC_0305_Fotor DSC_0308_Fotor DSC_0307_Fotor