பாராளுமன்றத்தை ஜனாதிபதி உடனடியாக கலைக்க வேண்டும் !

 

நாட்டில் ஸ்திர­மான அர­சாங்கம் ஒன்று இன்­மை­யி­னா­லேயே பாரிய குழப்­ப­க­ர­மான நிலை தோன்­றி­யுள்­ளது. எனவே இவ் அனைத்து சிக்­கல்­க­ளுக்கும் தீர்வை காண்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்தை கலைப்­பதே ஒரே தீர்­வாகும் என்று மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் மஹிந்த அணியின் முக்­கி­யஸ்­த­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்­த­லுக்கு செல்­வதன் மூலம் மக்கள் தமக்குத் தேவை­யான அர­சாங்கம் ஒன்றை அமைத்­துக்­கொள்­வார்கள். அப்­போது ஸ்திர­மான அர­சாங்கம் உரு­வாகும். எனவே ஜனா­தி­பதி உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தை கலைக்­க­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தை விரை­வாக கலைக்­க­வேண்டும் என்று கோரி­வ­ரு­கின்­றமை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் ஸ்திர­மான அர­சா­ங்கம் இல்லை. பெரும்­பான்மை பல­மற்ற அர­சாங்­கமே பத­வியில் உள்­ளது. இதனால் நாட்­டிலும் பாரா­ளு­மன்­றத்­திலும் குழப்­ப­க­ர­மான நிலை தோன்­றி­யுள்­ளது.

இவை அனைத்து பிரச்­சி­னைகளுக்கும் தீர்­வைக்­காண்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்தை கலைப்­பதே காணப்­ப­டு­கின்ற ஒரே தீர்­வாகும் என்­ப­தனை அனை­வரும் புரிந்­து­கொள்­ள­வேண்டும். பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்­தலை நடத்­தினால் மக்கள் பெரும்­பான்மை பல­முள்ள அர­சாங்கம் ஒன்றை தெரிவு செய்­வார்கள். அவ்­வாறு பெரும்­பான்மை பல­முள்ள அர­சாங்கம் தெரிவு செய்­யப்­ப­டு­மி­டத்து நாட்டில் எந்தக் குழப்­பமும் ஏற்­ப­டாது.

எந்த கட்­சியை தெரிவு செய்து ஆட்­சி­ய­மைக்க விடு­வது என்று மக்கள் தீர்­மா­னிப்­பார்கள். ஜன­வரி எட்டாம் திக­தியின் பின்னர் நாட்டில் செயற்கை அர­சாங்­கமே அமைக்­கப்­பட்­டது. ஆனால் அந்த அர­சாங்கம் தோல்­வி­ய­டைந்­துள்­ளது. எனவே இதற்கு பின்­னரும் காத்­துக்­கொண்­டி­ருக்­காமல் பாரா­ளு­மன்­றத்தை உட­ன­டி­யாக கலைத்து தேர்­தலை நடத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

நாட்டு மக்கள் தேர்­தலில் போது அனைத்து பிரச்­சி­னை­க­ளு­க்கும் தீர்வு வழங்­கு­வார்கள். அவர்கள் வாக்­க­ளித்து பெரும்­பான்மை பல­முள்ள அர­சாங்­கத்தை தெரிவு செய்­வார்கள். எனவே அர­சாங்கம் உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்கவேண்டும்.

பாராளுமன்றத்தை கலைப்பதே மேல் என்று சபாநாயகர் கூட கூறிவிட்டார். எனவே இந்த விடயத்தை கருத்திற் கொண்டு பாராளுமன்றத்தை உடனடியாக கலைப்பதற்கு ஜனாதிபதி தீர்மானம் எடுக்கவேண்டும் என்றார்.