புனித றமழான் மாதத்தை முன்னிட்டு விஷேட பயான் நிகழ்வு காத்தான்குடியில் இன்று!

2-DSC02281-copy_Fotor(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
புனித றமழான் மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையமும் பிரதேச செயலக கலாசாரப் பிரிவும் இணைந்து விஷேட பயான் நிகழ்வொன்றை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் 05-06-2015 இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.மணிக்கு நடாத்த திட்டமிட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.ஐ.எம்.எம்.மஹ்பூல் தெரிவித்தார்.
மேற்படி விஷேட பயான் நிகழ்வில் ‘ஆத்மீக பயிற்சிக் களமான புனித றமழானில் வால்வியல் பண்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோன்பினூடாக நல்லதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம் ‘ எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.மன்சூர் மதனி விஷேட சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளார்.
இதில் அனைத்து பொது மக்களையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையமும் பிரதேச செயலக கலாசாரப் பிரிவும் வேண்டுகோள் விடுக்கின்றது.