விஞ்ஞான பாடங்கள் அடங்கிய புதிய பாடசாலைகள் அமைக்க நடவடிக்கை !

ranil-wickramasinghe-1-colombo-telegraphதோட்டப் பகுதிகளில்  உயர்கல்வியை  அபிவிருத்தி செய்ய உயர்தரத்தில் விஞ்ஞான பாடங்கள்  அடங்கிய  புதிய பாடசாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
 கலஹா பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி  உறுதிப்பத்திரம் வழங்கும்  நிகழ்வில் கலந்து  கொண்டு  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
500 தோட்டத் தொழிலாளர்களுக்கு அன்றைய தினம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.